Saturday, September 5, 2009

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

இந்தக் கவிதை YOUTHFUL VIKADANIL.....!!!!!
ரயில் பயணங்களில்....

ஜன்னலில் கூடவே
ஓடி வரும்
நிலவு

கூந்தல் கலைத்து
வருடி வரும்
காற்று

கன்னம் சிலிர்க்க
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை

கையசைத்து விடை கொடுத்து
வழியனுப்பாமல் கூடவே
வந்ததால்

எனக்குப் புரிந்தது
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!

No comments:

Post a Comment