Saturday, September 19, 2009

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........


மனதின் பட்டாம்
பூச்சியின் சிறகுகள்
இன்று ஏனோ
திறந்தே இருக்கின்றன...

நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..

என் வானம்
முழுவதுமாய் உடைந்து
போன நிலவுத் துண்டுகள்
சிதறிக் கிடக்கிறது..........

பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......

நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......

1 comment:

  1. மிக அருமையாக எழுதப்பட்ட வரிகள்..

    ReplyDelete